Showing posts with label தமிழ்த்தாய் வாழ்த்து. Show all posts
Showing posts with label தமிழ்த்தாய் வாழ்த்து. Show all posts

Friday, January 2, 2009

தமிழ்த்தாய் வாழ்த்து !.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!


-மனோன்மணீயம் பெ, சுந்தரம்பிள்ளை